Thursday, May 15, 2014

சமிக்ஞையை மீறி நிறுத்தாமல் சென்ற முச்சக்கர வண்டி மீது பொலிஸாரினால் துப்பாக்கிச்சூடு!

வாதுவ பகுதியில் சமிக்ஞையை மீறி நிறுத்தாமல் பயணித்த முச்சக்கர வண்டி மீது பொலிஸாரினால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த இருவருக்கு துப்பாக்கிச்சூடு காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்கென நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடம் இல்லை என நாகொட வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com