Thursday, May 8, 2014

எல்.ரி.ரி.ஈ இயக்கத்தை நினைவுகூர்ந்து நிகழ்வு நடத்துவது பாரிய குற்றம்!

பயங்கரவாத அமைப்பான எல்.ரி.ரி.ஈ இயக்கத்தை நினைவுகூர்ந்து நிகழ்வு நடத்துவது இந்நாட்டு சட்டத்தை கடுமையாக மீறும் செயல் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. உயிரிழந்த புலி உறுப்பினர்களை நினைவுகூர்ந்து எதிர்வரும் 18ம் திகதி தமிழ்த் தேசிய அமைப்பால் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் இயக்கத்தை நினைவுகூர்ந்து நிகழ்வு நடத்துவது அந்த இயக்கத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்கும் செயற்பாடு என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நாட்டு நீதியை மதிக்காது ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வு தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்குமாறும் இதனை ஏற்பாடு செய்யும் நபர்களை கைது செய்யுமாறும் தேசிய சுதந்திர முன்னணி கேட்டுக் கொண்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com