Monday, May 19, 2014

கொழும்பில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட பெண் ஹட்டனில் மீட்பு !! (படங்கள்)

கொழும்பில் கடத்தப்பட்ட 40 வயதுடைய பெண்ணொருவரை, ஹட்டன் காட்டுப்பகுதியில் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரி வித்தனர். கொழும்பு தெமட்டகொட பேஸ் லைன் வீதியில் இலக்கம் 40 இல் வசிக்கும் 40 வயதுள்ள 3 பிள்ளைகளின் தாயாரை வெள்ளை வானில் கடத்தி கொண்டு, ஹட்டன் வில்பிரட் பிரதேசத்தில் தேயிலை காட்டுப் பகுதியில் கட்டி வைத்ததாகவும் இச்சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

பாத்திமா நிலுபா உசைன் என்ற பெண்ணையே இவ்வாறு நேற்று மாலை 4 மணியளவில் கடத்தி குறித்த பெண்ணிடம் இருந்த தங்க ஆபரணங்களை அபகரித்து முகத்தை மறைத்து கைகளை கட்டியதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் குறிப்பிட்டனர். மேற்படி பெண் கட்டிய கயிறை கழற்றி குறித்த பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறிய போது, வீட்டில் இருந்த உரிமையாளர் 119 என்ற பொலிஸ் அவசர பிரிவுக்கு அழைத்து சம்பவத்தை தெரிவித்தனர். இதனையடுத்து, ஹட்டன் பொலிஸார் இன்று அதிகாலை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததுள்ளனர்.

குறித்த பெண்ணின் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளதனால் அப்பெண்ணை டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்ததாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இதற்கு முன்னர் ஹட்டன் பகுதிக்கு வந்ததில்லையென இப்பெண் தெரிவித்ததாகவும், இவர் கொடுத்த வாக்குமூலத்தில் சந்தேகம் இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.விசாரணைக்கு பெண்ணின் கணவர் ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தர வேண்டும் எனவும் மேலும் தெரிவித்துள்ளனர்.







0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com