Friday, May 2, 2014

பாரத லக்ஷ்மன் கொலைக்கு துமிந்த சில்வாவுக்கு கொலை வழக்கு பதிவு!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர மற்றும் நால்வரை கொலை செய்தது தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆரம்பக் கட்ட சாட்சி விசாரணை இன்று (02) முடிவுற்றுள்ளது.

அதற்கேற்ப, பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, பிரதிவாதிகள் 11 பேருக்கு எதிராக கொலைக் குற்றம் பதிவு செய்வதற்குப் போதிய சாட்சிகள் உள்ளன என பதில் நீதவான் பிரியந்த லியனகே குறிப்பிட்டார்.

அந்த வழக்கானது மேல் நீதிமன்றத்தின் விசாரணைக்காக அனுப்பிவைக்கப்படும் எனவும் நீதவான் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com