Friday, May 2, 2014

பொத்துஹெர புகையிரத விபத்து தொடர்பில் ஐவருக்கு பணி இடைநிறுத்தம்!

பொத்துஹெர புகையிரத விபத்து தொடர்பில் “தெயட்ட கிருல” (தேசத்தின் மகுடம்) புகைவண்டி (எஞ்சின்) சாரதி, சாரதி உதவியாளர், பிரதான மேலாளர், பொத்துஹெர புகையிரத நிலைய அதிபர் மற்றும் சமிக்ஞையாளர் ஆகிய ஐவரின் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

நேற்று (01) இந்த பணி இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த “ரஜரட்ட ரெஜின” கடுகதி புகையிரதம், பொத்துஹெர புகையிரத நிலையத்தில் தரித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது கொழும்பிலிருந்து பளை நோக்கிப் பயணித்த “தெயட்ட கிருல” புகைவண்டி அதனுடன் மோதியதால் நேற்று முன்தினம் (30) ஏற்பட்ட விபத்தில் 63 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதுதொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, பொத்துஹெர புகையிரத நிலையத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள சமிக்ஞை பகுதி (கெபின்) சீல் வைக்கப்பட்டுள்ளதாக புகையிரத்த் திணைக்கள சிரேட்ட அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com