Saturday, May 3, 2014

சிறுநீரக நோய் பற்றிய ஆய்வு வேண்டாம்! - ஆய்வாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல்

இலங்கை முழுவதும் பரவிச் செல்கின்ற மிகப் பயங்கரம் வாய்ந்த சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணமான ஆசாணிக் உள்ளிட்ட சிறுநீரகத்தின் வழி கொண்டு செல்கின்ற முக்கிய தீங்குவிளைவிக்கும் நாசினியாக கல்யிபோஸ்ட் எனும் களைகொல்லியை கண்டுபிடித்துள்ளனர். இதனால், அமெரிக்க கலிபோனியா பல்கலைக்கழக பேராசிரியர் சரத் குணதிலக்கவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

அந்த ஆய்வுக் குழுவின் உறுப்பினர்களான ரஜரட்ட மருத்துவ பீட விரிவுரையாளர் வைத்தியர் சன்ன ஜயசுரமன இதுபற்றித் தெரிவிக்கும்போது, அந்த ஆய்வை உடனடியாக நிறுத்துமாறும், இலங்கைப் பிரச்சினை பற்றி பேச வேண்டாம் எனவும் இவ்வச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடுகின்றார்.

இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளவர்கள் இலங்கையைச் சேர்ந்த ஒரு பகுதியினர் எனத் தெரியவந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com