Saturday, May 10, 2014

முல்லைத்தீவு வெள்ளாமுள்ளிவாய்க்காலில் பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்பு!

எல்.ரி.ரி.ஈ யினால் முல்லைத்தீவு வெள்ளாமுள்ளி வாய்க்கால் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான கைத்துப்பாக்கித் தோட்டாக்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். புதைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தோட்டாக்களை கிழக்கு கடற்படை முகாம் அதிகாரிகள் நேற்று மாலை கண்டுபிடித்ததாக கடற்படையின் பேச்சாளர் கொமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவத்தினரும் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பை வழங்கியிருந்தாக கடற்படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com