Sunday, May 4, 2014

அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐதேகவிலிருந்து மூன்றாவது அபேட்சகர் நியமிக்கப்படுவாராம்!!

அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பொது அபேட்சகர் ஒருவரை நிறுத்துவதற்குப் பதிலாக மூன்றாவது அபேட்சகர் ஒருவரை நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அரச வட்டாரச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இந்த அபேட்சகர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நிறுத்தப்படுகின்ற அபேட்சகர்களுக்கு வெளியிலிருந்தே நிறுத்தப்படவுள்ளதாகத் தெரிய வருகின்றது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு கிடைக்கின்ற வலது சாரியினரின் வாக்குகளைக் குறைப்பதற்குப் பொருத்தமான ஒருவரையே மூன்றாவது அபேட்சகராக நிறுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

என்றாலும், இது தொடர்பில் கருத்து வேற்றுமைகள் கட்சியினுள் இருப்பதாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com