Friday, May 2, 2014

அடுத்துவரும் தேர்தலுக்கு முன்னர் எனைக் கொலைசெய்யத் திட்டமிட்டுள்ளார்கள்! - பொன்சேக்கா

எலும்புக் கூடுகளிலான துப்பாக்கிகள் எங்களுக்கு “ஜுஜுபி”!

அடுத்து வரவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் என்னைக் கொலை செய்துவிட்டு, தேர்தலில் போட்டியிடாது இருப்பதற்கான திட்டமிடல்கள் நடைபெற்றுவருவதாக ஜனநாயக்க் கட்சியின் தலைவர் சரத் பொன்சேக்கா குறிப்பிடுகிறார்.

பத்தரமுல்ல - பெலவத்தயில் இடம் பெற்ற ஜனநாயகக் கட்சியின் மே ஊர்வலத்தின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

சில அமைச்சர்கள் தன்னோடு தொடர்புகொண்டு ஆளும் கட்சியை கெட்ட வார்த்தைகளால் திட்டுவதாக்க் குறிப்பிட்ட அவர், 2015 ஆம் ஆண்டு மக்களை துன்பத்திற்கு ஆளாக்கிவரும் இந்த கடும்போக்கு ஆட்சியை மாற்றியமைப்பதாகக் குறிப்பிட்டார்.

“அடுத்த தேர்தலில், துப்பாக்கிகளையும், வாள்களையும் காட்டி எங்களை அச்சமூட்டி ஒதுக்கி வைக்க ஆளும் தரப்பு நடவடிக்கை எடுத்துவருவதாகத் தெரியவருகின்றது. பாரிய ஆயுதங்களைக் கையாண்டுள்ள எங்களுக்கு இந்த எழும்புக்கூட்டு துப்பாக்கிகள் எம்மாத்திரம்? களவு பொய் இல்லாமல், முடியுமாயின் நீதியான தேர்தல் ஒன்று நடாத்தி எங்களுடன் போட்டியிட்டுப் பார்க்குமாறு நான் ஆளும் கட்சிக்குச் சவால் விடுகின்றேன்” எனவும் அவர் மே தின ஊர்வலத்தின் போது குறிப்பிட்டார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com