பிரபாகரன் மைத்துனனது நினைவு கூரல் பொலிஸாரால் அபேஸ்!
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் இறந்த தமிழ் மக்களை நினைவு கூர்ந்து தான் வட மாகாண சபை முன்றலில் சென்ற வெள்ளிக் கிழமை (16) அதிகாலை விளக்கேற்றியதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
போரில் இறந்தவர்களை நினைவு கூர்ந்து விளக்கேற்றுவது தொடர்பில் அவரிடம் கருத்தினை கேட்டபோது, போரில் இறந்த தனது சகோதர மக்களை நினைவுகூர்ந்து தானும் வட மாகாண சபையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஆனந்தி சசீதரனும் மாகாண சபைக்கு முன்னால் விளக்கேற்றியதாக குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு தனது சகோதர தமிழர்களை நினைவு கூர்ந்து விளக்கொன்றைக் கூட பற்றவைப்பதற்கு பொலிஸார் இடந்தரவில்லை என அவர் ஆதங்கப்படுகின்றார்.
சிவாஜிலிங்கம் தொடர்ந்து கருத்துரைக்கும்போது, தானும் ஆனந்தியும் மாகாண சபைக்கு முன்னால் விளக்கேற்றும்போது பொலிஸார் எங்களுக்கு பெரும் இடைஞ்சல் விளைவித்ததாகக் குறிப்பிடுகின்றார்.
போரில் இறந்த தனது உறவுகளை நினைவு கூரும் போது எந்தவொரு சக்திக்கும் தான் பயப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment