Tuesday, May 27, 2014

எல்.ரி.ரி.ஈ இயக்கத்தை மீள உருவாக்க நினைத்ததின் விளைவு! இதுவரை 77 பேர் கைது! (படங்கள்)

எல்.ரி.ரி.ஈ இயக்கம் மீளுருவாக்கம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கைகளில் இதுவரை 77 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 6ம் திகதி தொடக்கம் இதுவரையான காலத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் 47 சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இதேவேளை தபுலிகள் அமைப்பை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில் மலேசியாவில் கைதான மூவரும் நேற்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு பயங்கரவாதத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த மூவரும் மலேசியாவின் சொலாங்கூர் பிரதேசத்தில் தங்கியிருந்த வேளை அந்நாட்டு பொலிஸார் கடந்த 15 ஆம் திகதி அவர்களைக் கைது செய்தனர். பல நாடுகளில் தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்புக்கு நிதி சேகரிப்பது மற்றும் அதற்கான பரப்புரைகளை செய்வது ஆகிய நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com