Friday, May 9, 2014

வவுனியா பொலிஸிற்கு குண்டுத் தாக்குதல் நடாத்தச் சென்ற 5 பிடியணைகளுடைய “அருணாச்சலம்” மாட்டிக்கிட்டார்!

வவுனியா பொலிஸிற்கு குண்டுத் தாக்குதல் நடாத்தச் சென்ற பிரபல கொள்ளையர் ஒருவர் நேற்று (8) அதிகாலை வவுனியா - செக்கடிப்பில பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டார் என வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வவுனியா பிரதேசத்தில் நிகழ்ந்த வீட்டுக் கொள்ளைகள் பலவற்றுடன் சம்பந்தப்பட்ட, 5 பிடியாணைகளையுடைய குற்றவாளியான அருணாச்சலம் மயுரன் என்பவரைக் கைதுசெய்யச் சென்றவேளை, கைக்குண்டுத் தாக்குதல் நடாத்த முனைந்ததாகவும், உடனடியாக களத்தில் இறங்கிய பொலிஸார் குறித்த நபரை தங்களது வலைக்குள் சிக்கவைத்துள்ளனர்.

குறித்த கொள்ளையன் சென்ற பல மாதங்களாக வீடுகள் பலவற்றில் கொள்ளையிட்டுள்ளதுடன், சென்ற ஜனவரி மாதம் 30 ஆம் திகதி வவுனியா நெலுக்குளம் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் கொள்ளையிட்டு வீட்டுப் பொறுப்பாளரான கணவனைக் கட்டிவைத்துவிட்டு, மனைவியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியது போன்ற பல்வேறு குற்றங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவராவான் என வவுனியாப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர் வவுனியாப் பிரதேசத்தில் இடம்பெறுகின்ற அனைத்துக் கொள்ளைச் சம்பவங்களுடனும் தொடர்புடைய கள்வர் கும்பலின் தலைவன் எனவும் வ்வுனியாப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வ்வுனியா, மன்னார் மாவட்ட பொலிஸ் மாஅதிபர் ஜயந்த விக்கிரமசிங்கவின் கண்காணிப்பின் கீழ் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com