Sunday, May 11, 2014

புலனாய்வு பிரிவுகள் 24 மணிநேரமும் உஷார் நிலையில்! தீவிரவாதிகள் ஒருபோதும் மீள ஒருங்கிணைய முடியாது!

தீவிரவாதிகள் மீள ஒருங்கிணைவதைத் தடுப்பதற்கு புலனாய்வுப் பிரிவுகள் 24 மணிநேரமும் உஷாரான செயற்பாட்டு நிலையில் உள்ளனஇலங்கையில் தீவிரவாதத்துக்கு மீண்டும் உயிர்கொடுக்க எந்தவொரு தனி நபருக்கோ அல்லது அமைப் புக்கோ இடமளிக்கப்படாது என்று பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டில் தீவிரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் படையினர், தீவிரமான விழிப்பு நிலையில் வைக்கப்பட்டிருப்பர். படையினர் தற்போது அபிவிருத்தி மற்றும் மீள்கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவர்களின் முக்கியமான பொறுப்பு. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com