Friday, April 18, 2014

இலங்கையில் யுத்த மீறல்கள் தொடர்பாக விசாரணை நடாத்துமாறு இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு.

டில்லி தமிழ் சட்டத்தரணிகள் சங்க தலைவர், இலங்கையில் இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்றச்செயல்கள் தொடர்பாக, புலனாய்வுத்துறை ஊடாக விசேட விசாரணையொன்று நடாத்தப்பட வேண்டுமென மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட இந்திய உச்சநீதிமன்றம், அதனை நிராகரித்துள்ளது.

இதன் சட்ட ரீதியான தன்மை, நீதித்துறை எல்லைகள் தொடர்பாக இதனை விசாரிக்க முடியாது என தெரிவித்து இந்திய உச்சநீதிமன்றம் இம்மனுவை நிராகரித்துள்ளதாக, இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com