Tuesday, April 8, 2014

வெளிநாட்டு புலிகள் அமைப்பின் நெடியவன் குழுவின் முக்கிய இரண்டாவது நபர் கைது!

புலிகள் அமைப்பின் நெடியவன் குழுவின் இரண்டாவது முக்கிய நபர் எனக் கருதப்படுகின்ற கபிலன் என்றழைக் கப்படும் நந்தகோபன் என்பரைக் கைதுசெய்து, மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் பிரிவினர் குறிப்பிடுகின்றனர்.

மலேசியாவிலிருந்து இலண்டன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஈரானின் தெஹ்ரான் விமான நிலையத்தில் வைத்தே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நந்தகோபன் தென்கிழக்காசியாவை தலைமையாகக் கொண்டு தன்னுடைய செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்றுள்ளதுடன், நெடியவன் குழுவின் இரண்டாவது முக்கிய நபருமாவார்.

(கேஎப்)

1 comments :

SKT ,  April 9, 2014 at 7:05 PM  

புலம் பெயர் நோர்வே முன்னால் ஊடக புலனாய்வு பிரிவு புலி ஊத்தை சேது தான் இவனை மாட்டி விட்டுள்ளான்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com