Tuesday, April 8, 2014

வீட்டுக்கு மின்சாரம் இல்லை... ஆனால் மின்சாரப் பட்டியல் வருகிறது.. - கெக்கிராவையில் சம்பவம்!

கெகிராவை பிரதேச - மின் பொறியியலாளர் பிரதேசத்திற்குட்பட்ட வீடொன்றில் மின்சாரம் இல்லாதபோதும், மின்சாரப் பட்டியலுக்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டியேற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

பலாகல - பஹலகம பிரதேசத்தில் வசிக்கும் யூ.ஜீ. மெணிக்கா என்ற பெண்ணுக்கே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் கருத்துரைக்கும்போது -

“எங்கள் வீட்டில் மின்சாரம் இல்லாதபோதும் எங்களுக்கு மின்சாரப் பட்டியலொன்றுக்கான கட்டணத்தை கட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. எங்கள் வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதற்காக கம்பியினை இணைத்து, 4 - 5 மாதங்களாகின்றன. பல மாதங்களுக்கு முன்னர் எங்கள் வீட்டு மின்சார சபையினர் வந்து “மீட்டர்” இணைத்துவிட்டுச் சென்றார்கள். நாங்கள் அந்த வேலையையும் மிகவும் கஷ்டத்துடன் கடன் பட்டே செய்தோம். எவ்வாறாயினும், அந்த வேலைகள் முடிந்து மாதங்கள் பல ஓடிவிட்டபோதும் இதுவரை எங்களுக்கு மின்னிணைப்புக் கிடைக்கவில்லை. என்றாலும், இப்போது இரு மாதங்களாக எங்களுக்கு மின்சாரப் பட்டியல் வருகின்றது. சென்ற மார்ச் மாதமும் ஒரு பட்டியல் வந்தது.

எங்கள் வீட்டுக்கு மின்சாரம் இல்லாததனால் எனது பிள்ளைகள் மண்ணெய் விளக்கிலேயே படிக்கிறார்கள். எங்கள் கிராமத்தில் இன்னும் பல வீடுகள் உள்ளன. அங்கெல்லாம் “மீட்டர்” மட்டுமே உள்ளது மின்சாரம் இல்லை. இதுதொடர்பில் நாங்கள் பொறுப்புச் சொல்ல வேண்டிய பலரிடமும் சொன்னோம்.. ஆனது ஒன்றுமில்லை.” எனக் குறிப்பிட்டார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com