Monday, April 14, 2014

எனக்கும் கீதாவுக்குமிடையே எந்தப் பிரச்சினையும் இல்லை! -சான் விஜயலால்

தனக்கு தென் மாகாண சபை உறுப்பினர் கீதா குமாரசிங்கவுடன் எவ்வித தனிப்பட்ட பிரச்சினைகளும் இல்லை என, தென் மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் சில்வா குறிப்பிடுகிறார்.

“நான் தென் மாகாண சபைக்கு ஆறு முறை தெரிவாகியுள்ளேன். மூன்று முறை முதலமைச்சராகியுள்ளேன். முதற்றடவையில் எனக்கு 21,000 வாக்குகள் கிடைத்தன. இம்முறை 96,000 வாக்குகள் கிடைத்துள்ளன.

நான் என்றும் மக்களுடன் ஒன்றிணைந்தே இருந்தேன். மக்களின் தேவைகளை இயலுமான முறையில் நிறைவு செய்தேன். மக்களுக்குத் தேவையான சேவையை தொடர்ந்தும் நான் செய்வேன்.

எனக்கு கீதா குமாரசிங்கவுடன் ஒருபோதும் தனிப்பட்ட பிரச்சினை இருக்கவில்லை. வாக்காளர்கள்தான் தீர்ப்பளித்திருக்கிறார்கள். எங்கள் எல்லோரைப் பற்றியும் அவர்கள் சொல்லித் தந்திருக்கிறார்கள்.

பொதுவாக சகல வேட்பாளர்களும் தங்களுக்கான தங்களுக்காக தாங்கள்தான் தேர்தலுக்காக முன்னின்று உழைப்பார்கள். விருப்பு வாக்கு முறைக்கேற்ப நாங்கள்தான் அதில் வெற்றிகாண முயற்சிக்க வேண்டும்.

பொதுமக்கள் எனக்கு அளித்த ஒத்துழைப்புக்காக நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன். நான் என்றும் அவர்களுடன் கை கோத்திருப்பேன்” எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com