Tuesday, April 29, 2014

பேயோட்டி பெண்ணைக் கொன்ற பூசாரி - மட்டில் சம்பவம் !

வீட்டில் சூனியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பெண்ணின் வீட்டில் பூசாரி ஒருவரால் பூசைகள் நடத்தப்பட்டன. மட்டக்களப்பு,வெல்லாவெளி பகுதியில் பூசாரி ஒருவர் பூசை யின் போது பேயோட்டியதால் பெண்னொருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெல்லாவெளியை சேர்ந்த பெண்னொருவர் கடந்த மூன்று மாதமாக மன நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.இந்நிலையில் இவர் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் வீட்டுக்கு வரும்போது நோய் மீண்டும் ஏற்பட்டதால் சோதிடரை நாடினார்.

எனினும் எதுவித பயனும் ஏற்படாத நிலையில் வேறு இடத்தில் இருந்து வேறு ஒரு பூசாரி அழைத்து வரப்பட்டு பூசைகள் செய்யப்பட்டன. இதன்போது பெண்ணின் தலையில் வேப்பிலைக் கட்டினால் அடித்து பூசைகள் செய்யப்பட்டன. இந்நிலையில் பெண் தலையில் கடுமையாக தாக்கப்பட்டதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் களுவாஞ்சிகுடி வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com