Sunday, March 2, 2014

குருணாகலை மாணவியின் உயிரைக் காவுகொண்ட FACEBOOK படத்தை செய்தவரைத் தேடி வலைவீசுகிறது பொலிஸ்!

பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் வெளியானதொரு புகைப்படம் தொடர்பில் தனது உயிரைப் பறிகொடுத்த, குருணாகலை ஜோன் கொத்தலாவல மகா வித்தியாலய மாணவி வெனுஷா இமந்தி தொடர்பிலான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தற்கொலைக்குக் காரணமான புகைப்படத்தை வடிவமைத்து, அதனை பேஸ் புக்கில் பகிர்ந்துகொண்டவர் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கு துரித விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண குறிப்பிடுகிறார்.

மாணவியின் படத்தை வடிவமைத்து, அதனை முகநூலில் பகிர்ந்தவர் பற்றி வெகுவிரைவில் தெரிந்துகொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவியின் தற்கொலைதொடர்பில், குறித்த பாடசாலையிலிருந்து 15 பேரின் வாக்குமூலங்களை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பெற்றுக்கொண்டுள்ளது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

1 comments :

Anonymous ,  March 4, 2014 at 4:11 AM  

viraivaoaddilka kaithu seithu ammanamaka oda vidunakagal

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com