Tuesday, March 4, 2014

சீனாவில் நடத்தப்பட்ட ஈவிரக்கமற்ற தாக்குதல்களுக்கு, இலங்கை அரசாங்கம் கண்டனம்!

நேற்று முன்தினம் சீனாவின் குன்மிங் நகரில் நடத்தப்பட்ட ஈவிரக்கமற்ற தாக்குதல்களுக்கு, இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் குன்மிங் நகரில் புகையிரத நிலையம் ஒன்றினுள் கத்திகளுடன் புகுந்த சிலர் சரமாரியாக தாக்குதல் நடத்தியதில், 33 பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.


இந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, சீனாவின் ஜனாதிபதி சீ ஜின்பின்னுக்கு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளாதுடன் அக்கடிதத்தில் பயங்கரவாதத்தை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் சீனாவுக்கு எப்போதும் பக்கபலமாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com