Saturday, March 15, 2014

காலி - மாத்தறை அதிவேக பாதையைத் திறந்துவைத்தார் ஜனாதிபதி!

தெற்கு அதிவேக வீதிக் கட்டமைப்பின் காலி முதல் மாத்தறை வரையான பகுதியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று மாலை 4.00 மணியளவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

தெற்கு அதிவேக வீதிக் கட்டமைப்பின் கடுவெல முதல் கொட்டாவை வரையான பகுதி கடந்த 8 ஆம் திகதி திறந்துவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த மார்க்கத்திலான மீளாய்வு செய்யப்பட்ட பஸ் கட்டணங்கள் இன்றிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. கடுவெல மற்றும் கொட்டாவையில் இருந்து மாத்தறை வரையான பயணத்திற்கு 500 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது.

(என்எப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com