சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய முதியவர் கைது!
15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நாத்தண்டிய - பஹல மாரவில பகுதியில் வசிக்கும் 64 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வருடம் டிசம்பர் 9 ஆம் திகதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில் பெப்ரவரி 3ஆம் திகதியே பொலிஸாருக்கு தெரியவந்ததன்பின் சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக பொலிஸார் மாரவில வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
சிறுமி தொடர்பான வைத்திய அறிக்கை நேற்று (18.03.2014) வெளிவந்துள்ள நிலையில் அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment