Saturday, March 8, 2014

பொலிஸாருக்கு பயந்து பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பயணித்த மோட்டர் சைக்கிளை மோதித்தள்ளிய சொகுசு யாழ்தேவி

வடபகுதிக்கான ரயில் சேவை விஸ்தரிக்கப்பட்டு வரும் நிலையில் பளை வரையிலான ரயில் போக்குவரத்துக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பளையில் இருந்து இன்று (8) காலை 6.50க்கு சொகுசு யாழ் தேவி சிட்டாக புறப்பட்டு கொழும்பு நோக்கி சென்றுள்ளது. இதன் போது தனது மனைவி மற்றும் பிள்ளையுடன் வந்த மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமையால் பொலிசாரைக் கண்டு மாற்று பாதையூடாக செல்ல எத்தனித்துள்ளார்.

தனது மனைவியை ஏ9 வீதியில் இறக்கிவிட்டு பிள்ளையுடன் பாதுகாப்பற்ற ரயில் கடைவையூடாக கடந்த போது சிட்டாக வந்த யாழ் தேவி மோதித் தள்ளியதில் இருவரும் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.

இவ்வாறு பலியாகியவர்கள் சிவசுப்பிரமணியம் சத்தியசுதன் (வயது 32) மற்றும் அவரது மகன் டினோஜன் (வயது 6) ஆகிய இருவருமே பலியாகியவர்களாவர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com