Wednesday, March 5, 2014

வவுனியா ரெலோ முக்கியஸ்தரும் வடமாகாண மீன்பிடித்துறை அமைச்சரின் இணைப்பாளருமான மயூரன் பொலிசாரால் கைது!

ரெலோ அமைப்பின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தரும் வடமாகாண போக்குவரத்து, மீன்பிடித்துறை அமைச்சின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும் சிற்றி சோடா கம்பனியின் முதலாளியுமான செந்தில்நாதன் மயூரன் பொலிசாரால் கடந்த 26 ஆம் திகதி நிதி மோசடி தொடர்பில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வீரவசனங்கள் பேசி ஒரு பாலச்சந்திரன் இறந்தால் என்ன, என்னைப் போல் இன்னும் பல பாலச்சந்திரன்கள் உருவாகுவார்கள் என ஊருக்குள் தேசியம் பேசி வவுனியா மாவட்டத்தில் 10,007 வாக்குகளைப் பெற்று ஐந்தாம் இடத்தைப் பெற்ற இவர் ஒரு கோடி ஐம்பது லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்தமைக்காக கைது செய்யப்பட்டார்.

கொழும்பில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவருக்கே மேற்படி பணத்தை கொடுக்காது மோசடி செய்துள்ளார் எனத் தெரியவருகிறது. இது தான் தேசியமா என பாதிக்கப்பட்ட வர்த்தகர் கேட்கின்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com