Wednesday, March 5, 2014

கொள்ளைக்குத் துப்பாக்கி கொடுத்த இராணுவ லெப்டினன் கைது!


பாதுக்கை நகரிலுள்ள நகைக்கடை ஒன்றில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு துப்பாக்கி ஒன்றினை வழங்கியமை தொடர்பில் இராணுவ லெப்டினட் ஒருவர் மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிவிரினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நகைக் கடையில் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான நகை மற்றும் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச்சென்ற சந்தேகநபர்களுக்கு இந்த இராணுவ லெப்டினனே துப்பாக்கியை வழங்கியதாக கிடைக்கப் பெற்ற தகவலையடுத்தே இவர் கைது செய்யப்பட்டாரென பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளைக்குப் பயன்படுத்துவதற்காக துப்பாக்கியை வழங்கியமைக்காக கொள்ளையர்களால் இவருக்கு 120 கிராம் தங்கம் வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்ததுடன் குறித்த இந்த இராணுவ வீரர் அளவ்வை பகுதியில் சேவையாற்றும் வருகிறார் என தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com