Thursday, March 20, 2014

ஜனாதிபதி போல் எனக்கும் உதவுங்கள்…! - ரணில்

தனக்கும் தேர்தல் காலப்பிரிவில் ஜனாதிபதிக்கு வழங்கப்படும் ஊடக ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஊடக ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுகிறார்.

தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதமொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் ஆரம்பம் முதல் அரச ஊடகங்களும், சில தனியார் ஊடக நிறுவனங்களும் தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டு வருவதாகவும், தேர்தலின் ஒரு பகுதியாக இக்கால கட்டத்தில் நடைபெறுகின்ற அரச விழாக்களில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மக்களை ஜனாதிபதியாக அன்றி, அரசியல் கட்சித் தலைவராக நின்றே விளித்துப் பேசுகின்றார் எனவும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அவரது கட்சிக்காக, உலங்கு வானூர்தி உட்பட அரச உடைமைகளைப் பயன்படுத்தி வருகின்றார் எனவும், அதற்காக எந்தவொரு தொகையும் செலுத்தப்படுவதில்லை எனவும் அவர் அக்கடித்த்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

1 comments :

Anonymous ,  March 20, 2014 at 10:09 PM  

இவர் இப்படியும் பிச்சை எடுக்க வெளிக்கிட்டுள்ளார்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com