சிறுவனைத் தீயினால் சுட்ட பாட்டி பொலிஸாரால் கைது !!
தமது எச்சரிக்கையை மீறி செயல்பட்ட ஒன்பது வயது சிறுவன் ஒருவனை பாட்டி ஒருவர் தீயினால் சூடு வைத்து காயப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக வயோதிபப் பெண் ஒருவரை திம்புள்ள பொலிஸார் கைது செய்துள்ளனர்.திம்புள்ள பொலிஸ் பிரதேசத்தைச் சேர்ந்த மவுண்ட் வரணன் தோட்டத்தைச் சேர்ந்த பாட்டி ஒருவ ரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தாயும் தந்தையும் வெளிநாட்டில் தொழிலுக்குச் சென்றுள்ள நிலையில் 5 ஆம் வகுப்பில் கல்விப் பயின்றுவரும் சிறுவனையும் சிறுமியையும் பாட்டியே பராமரித்து வருகின்றார். இந்நிலையில் தனது எச்சரிக்கையை மீறி செயல்படுவதால் ஆத்திரம் கொண்ட பாட்டி தீ கொல்லியால் சிறுவனின் முகத்திலும் பாதங்களிலும் சூடு வைத்துள்ளார். இது தொடர்பாக பாட்டியை பொலிஸார் கைது செய்து பிணையில் செல்ல அனுமதித்ததுடன் காயமடைந்த சிறுவனையும் நன்னடத்தை பராமரிப்பு கண்காணப்பின் கீழ் மீண்டும் பாட்டியிடமே ஒப்படைத்துள்ளனர்.
0 comments :
Post a Comment