போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய முக்கிய நபர்களில் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது !!
நாட்டில் பல போதைப் பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட தாரதொட்ட ஹேவாகே தமிழ் அஜித்குமார என்ற சந்தேக நபர் கடந்த சனிக்கிழமை பாங்கொக்கிலிருந்து இலங்கைக்கு வந்த போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ததாக பொலிஸ் ஊடக ப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன நேற்று கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
நாட்டில் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புபட்டடு வந்த பிரதான ஐந்து சந்தேக நபர்களில் ஒருவரான இவர் இலங்கையில் கைப்பற்றப்பட்ட பல போதைப் பொருட்களுடன் இவருக்கு சம்பந்தமிருப்பதாக மேலுமவர் தெரிவித்தார். மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த இச்சந்தேகநபர் தெவும்தொர ஷமல. எனவும் அழைக்கப்படுபவர் என்றும் அவர் தெரிவித்தார்.
இவருக்குச் சொந்தமான வள்ளங்கள் 8 மற்றும் ஜஸ்தொழிற்சாலையொன்றையும் இவருக்கு சொந்தமாண 11 காணிகளையும் அதில் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள ஹோட்டல் ஒன்றையும், வாகனங்களையும் பறிமுதல் செய்வதற்கான நடவடி க்கைகள் முன்னெடுக்கப் படுவதாகவும் இவர்தொடர்பில் மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுப்பிரிவினர் முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரி வித்தார்.
இதேவேளை சர்வதேச பொலிஸார் உடன் தொடர்பு கொண்டு இவருக்கு சர்வதே பிடியாணையும் விதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, இவர் கொலைச் சம்பவம் ஒன்றுடனும் தொடர்புடையவரென சந்தேகிக்கப் படுபவராவார் என்றும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment