Saturday, March 15, 2014

ஐ.நாவுக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள் வவுனியாவில் போராட்டம்

இலங்கையின் இறையாண்மையை மீறி ஐ.நாவில் கொண்டுவரப்படும் தீர்மானம் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களிடையே காணப்படும் உறவை இல்லாமல் செய்வதற்கே என கோரி வவுனியாவில் ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

வடமாகாணசபையின் சிறிலங்கா சுதந்திரகட்சி உறுப்பினர் தர்மபால செனவிரட்ண அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இப் போராட்டத்தில் 1000 வரையிலானோர் கலந்து கொண்டனர்.

இன்று சிறிலங்கா சுதந்திரகட்சியின் வவுனியா அலுவலகத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட இப் போராட்டமானது ஏ9 வீதி வழியாக வந்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேச செயலாளரிடம் மகஜரையும் கையளித்ததாக அறிய முடிகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com