ஹம்பாந்தோட்டைக்கு பாராளுமன்றம் வேண்டும்! - மகிந்த அமரவீர
ஹம்பாந்தோட்டையில் இன்றும் எல்லாம் இருக்கிறது. என்றாலும் பாராளுமன்றம் மாத்திரந்தான் இங்கில்லை என அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிடுகிறார்.
“ஹம்பாந்தோட்டைக்கு இன்று என்னதான் இல்லை. அனைத்து அடிப்படை வசதிகளும் அங்குள்ளது. அதிவேக நெடுஞ்சாலை, ஓட்டல்கள், துறைமுகம், விமான நிலையம்,புகையிரத நிலையம் எல்லாமே இருக்கின்றது.
பாராளுமன்றம் மாத்திரமே குறைவு.
கொஞ்சம் பாருங்கள்… முன்னர் கொழும்பில் மாத்திரமே நடாத்தப்பட்ட விழாக்கள், தேசிய விழாக்கள், தெயட்ட கிருல (தேசத்தின் மகுடம்) போன்ற கண்காட்சிகள் அனைத்தும் கிராமப் புறங்களிலும், நகரங்களிலும்…
அக்காலத்தில் அநுராதபுரம் போன்ற இரசதானிகளும் இவ்வாறு மாறின. இனி, ஹம்பாந்தோட்டைக்கும் பாராளுமன்றமொன்றைக் கொண்டுவருவதில் எவ்வித பிரச்சினையும் கிடையவே கிடையாது. கொஞ்சம் காலத்திற்குச் சரி… இது சத்தியமாக எனது தனிப்பட்ட கருத்தே அன்றி வேறில்லை” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment