Saturday, March 22, 2014

உள்ளுராட்சி சபை தேர்தல்கள் இனி வட்டார முறையில்!

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இனிவரும் காலங்களில் வட்டார முறையில் நடத்தப்படவுள்ளதுடன் இதற்காக நாட்டிலுள்ள 367 உள்ளுராட்சி சபைகளினதும் நிலப் பிரதேசங்களையும் வட்டாரங்களாகப் பிரிக்கப்படுவதற்காக தேசிய மற்றும் மாவட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழுக்கள் நிருவப்பபட்டு அவை தமது பணிகளை முன்னெடுத்து வருகின்றன.

மாவட்டக் குழு தனது அறிக்கையை தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்ததை அடுத்து தற்போது வட்டாரங்கள் எல்லாம் அடையாளப்படுத்தப்பட்டு வந்ததுடன் அப்பணி தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதுடன் இறுதி அறிக்கையை தயாரிப்பது சம்பந்தமான விடயங்களை உள்ளடக்கியதான ஆலோசனைக் கூட்டம் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களுக்கும் தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்குமிடையில் அமைச்சில் நடைபெற்றது.

இதன்போது தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தவிசாளர் ரவி திசாநாயக்க உள்ளிட்ட அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com