Monday, March 3, 2014

கிளிநொச்சியில் இளம்பெண்ணுக்கு வேலைதருவதாக மயக்கமருந்து கொடுத்து கற்பழித்த உளவளத்துறை பணியாளர்

மன உளைச்சலுக்குள்ளான தாயொருவர் அங்கு அமைந்துள்ள கிளிநொச்சி பொது மருத்துவ மனையில் உளவளத்துறை தொடர்பான வைத்திய உதவிகளைப் பெற்று வந்துள்ளார். கடந்த 15.02.2014 அன்று வைத்திய உதவிக்காகச் சென்ற தாயிடம் – அவரது குடும்ப நிலவரங்களைக் கேட்டறிந்த உளவளத்துறைப் பணியாளர் திரு. கணேசமூர்த்தி அவர்கள் அந்தத் தாயின் குடும்பத்திற்கு வாழ்வாதாரத்துக்காக அவருடைய மகளுக்கு (இளம்பெண்) வைத்தியசாலையில் ஒரு வேலை பெற்றுத் தருவதாகவும்இ அவருடைய கல்வித் தகமைகளுடன் நாளை 16.02.2014 அன்று மருத்துவ மனைக்குப் பக்கத்தில் உள்ள இசுலாமிய விடுதிக்குப் பக்கத்தில் தனது அலுவலகம் இருப்பதாகவும் அங்கு மகளை அனுப்பும் படியும் கூறியுள்ளார்

இவற்றை நம்பி தனது வாழ்வின் துயரங்கள் தீரப் போகின்றதே என்ற மகிழ்வோடு அந்தத் தாய் தனது மகளை 16.02.2014 அன்று காலையில் அனுப்பிவைத்துள்ளார். 16.02.2014 அன்று வைத்திய அதிகாரி கணேசமூர்த்தியை அந்த இளம் பெண் சந்திக்கச் சென்றுள்ளார். தனது அலுவலகம் இதுதான் என்று கூறிய கணேசமூர்த்தி, தனது வீட்டுக்குள் அப் பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். சிறிது நேரம் உரையாடி விட்டு குளிர் பாணம் ஒன்றை குடிக்க கொடுத்துள்ளார். அதனைக் குடித்த பின்னர் தனக்கு மயக்கம் வருவதை அப் பெண் உணர்ந்துள்ளார். இருப்பினும் அவரால் எழுந்து அங்கிருந்து செல்ல முடியவில்லை. இதனைப் பயன்படுத்தி கணேசமூர்த்தி அப்பெண் மீது தனது காம இச்சையை தீர்த்துள்ளார். பாலியல் வல்லுறவுக்கும் உள்ளாக்கியுள்ளார்.

வேலைக்குச் சென்ற தனது மகள் நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை என்று பதறிய தாய், அப் பெண்ணின் காதலனை அழைத்து அவரை தேடும் படி கூறியுள்ளார். இந் நிலையில் மறு நாள் காலையிலேயே பாதிக்கப்பட்ட பெண் வீடு திரும்பியுள்ளார். நடந்த விபரீதத்தை கேட்டறிந்த தாயார், வைத்தியசாலை சென்று உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். ஆனால் எவருமே கணேசமூர்த்திக்கு எதிராக விசாரணை நடத்த தயார் இல்லை.

6 comments :

Anonymous ,  March 3, 2014 at 5:34 PM  

வடக்கில் இப்போதுதான் உளவளத்துறை முளைவிடும் பருவத்தில் இருக்கிறது. இப்படியான நல்ல காரியங்கள் அதை முளையிலேயே கருகச்செய்துவிடும்.

Anonymous ,  March 3, 2014 at 5:35 PM  

வடக்கில் இப்போதுதான் உளவளத்துறை முளைவிடும் பருவத்தில் இருக்கிறது. இப்படியான நல்ல காரியங்கள் அதை முளையிலேயே கருகச்செய்துவிடும்.

Unknown March 4, 2014 at 3:57 AM  

naajai kaithu seithu najin uruppai akattungal

Unknown March 4, 2014 at 3:58 AM  

antha naajai kaithu seithu uruppai akattungal

Anonymous ,  March 4, 2014 at 3:59 AM  

kolai seijungal naajai

Anonymous ,  March 4, 2014 at 4:05 AM  

avanai thandijungal

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com