தமிழரின் நிலம் மேலும் பறிபோகின்றது! த.தே.கூ நித்திரையில், தேரர் நடவடிக்கையில்!
கடந்த 30 வருட கால யுத்தத்தில் அம்பாறை தமிழ் மக்களின் நிலம் முஸ்லிம்களால் திட்டமிட்ட ரீதியில் சூறையாடப்பட்டுள்ளது. கல்முனை , சம்மாந்துறை , நிந்தவுர் , அக்கரைப்பற்று என தமிழ் மக்களின் கைகளில் இருந்த நகரங்கள் முஸ்லிம்களில் கைகளில் வீழ்ந்தது. இவ்வீழ்ச்சிக்கு தமிழர் தரப்பு அரசியல்வாதிகளின் இரட்டைவேடமே காரணம் எனலாம்.
தனிநாடு கேட்டுக்சென்று தமிழ் அரசியல்வாதிகள் தங்கள் வசமிருந்தவற்றை தக்கவைத்துக்கொள்வதற்கு மாறாக பட்டுவேட்டிக்கு ஆசைப்பட்டு கோவணம் இழந்த நிலையில் உள்ளனர்.
அக்கரைப்பற்று நகரப்பகுதி முற்றிலும் தமிழர் தரப்பால் நிர்வகிக்கப்படுகின்ற ஆலையடி வேம்பு பிரதேச சபைக்கு சொந்தமானதாக இருந்து வந்தது. யுத்த காலத்தில் அரசுடன் பங்காளிகளாக இணைந்திருந்து முஸ்லிம்தரப்பால் அக்கரைப்பற்று நகரசபைப் பிரதேசத்தை விஷ்தரிப்பது என்ற போர்வையில் ஆலையடிவேம்பின் பெரும்பகுதி மு்ஸ்லிம்களுக்கு சொந்தமானதாக மாறியுள்ள அக்கரைப்பற்று நகர சபை எல்லைக்குள் கொண்டுவரப்பட்டதும், அதற்கு சொந்தமான சந்தை , பஸ்நிலையம் போன்றவற்றின் பாரிய வருமானம் அக்கரைப்பற்று நகர சபைக்கு மாறியதும் பதிவுகளாகியுள்ளன.
இந்நிலையில் அக்கரைப்பற்று நகரசபைப்பிரதேசத்தை மேலும் விஷ்தரிப்பது என்ற போர்வையில் தமிழருக்கு சொந்தமான ஆலையடிவேம்பு பிரதேசம் ஆக்கிரமிப்புக்குள்ளாகவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
ஆலையடி வேம்பு பிரதேச சபை தமிழ் தேசியக் கூட்டமைப்பால் நிர்வகிக்கப்படுகின்றது. ஆனால் மேற்படி ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆலைடிவேம்பு பிதேச சிவில் சமூகத்தினர் இலங்கைநெட் இற்கு தெரிவித்தனர்.
ஆலைடிவேம்புக்கான எல்லை பிரதேசங்களில் எல்லைப்பலகைகளை நடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபைத்தலைவர் ரெட்ணவேலிடம் இந்த கோரிக்கையை மக்கள் வைத்தும் அவர் செயற்படவில்லை என அவர்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.
இதுவரை ரெட்ணவேலால் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் சிவில் சமூகத்தினர் அம்பாறை சந்தேந்திரிய தேரரின் ஆலோசனை மற்றும் உதவியுடன் மேற்படி எல்லைப்பலகைகளை நடுவதற்கும் முஸ்லிம் தரப்பினரின் அபகரிப்பு நடவடிக்கையை முறியடிப்பதற்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment