Sunday, March 30, 2014

மாமடுவ குளத்தில் மூன்று சடலங்கள் மீட்பு...

வவுனியா மாமடுவ எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள குளத்தில் மூன்று சடலங்கள் சற்று முன் பொலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. இரண்டு யுவதிகளும், ஒரு இளைஞருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. இவர்களுடைய வயது சுமார் 18 - 23 இருக்கும் என மாமடு பிரதேசவாதிகள் தெரிவிக்கின்றனர். குளத்தில் படகில் சென்ற போது இவர்கள் படகு கவிழ்ந்து இறந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

சடலமான இரு யுவதிகளும் கட்டியணைத்தபடி குளத்திலிருந்து மிட்கப்பட்ட அதே வேளை இவர்களுடன் மூன்று பேரை பொலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இறந்து போயுள்ளவர்கள் குருமன்காடு, புதியசின்னக்குளம், செட்டிகுளம் ஆகிய பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

சித்தன்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com