Saturday, March 29, 2014

விபூஷிகாவை யாராவது பொறுப்பேற்க முன்வந்தால் நீதிமன்ற அனுமதியைப் பெற்று சிறுமியை ஒப்படைக்க முடியும்!

கோபியின் நண்பனிடம் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்பு

பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகச் செயற்பட்டார் என்ற குற்றச் சாட்டின் பேரில் விபூஷிகாவின் தாயாரான ஜெயகுமாரி கைது செய்யப்பட்டபோது சிறுமியை பொறுப்பேற்க எவரும் இல்லாததால் சிறுமியையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று பின்னர் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டிருந்தார்

எனினும் குறித்த சிறுமியை எவராவது பொறுப்பேற்று பாதுகாப்பாக வளர்ப்பதற்கு உத்தரவாதமளித்தால் சிறுவர் இல்லத்தி லிருக்கும் சிறுமியை நீதிமன்றத்தின் உத்தரவுடன் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்று யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகர் விமலரத்தின தெரிவித்தார்.

இதேவேளை தேடப்பட்டுவரும் கோபி என்பவரின் நண்பராகவும். அவருடன் நெருங்கி செயற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் வலி மேற்கு பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு தொகுதி துப்பாக்கி ரவைகள் மற்றும் தேடப்படும் கோபி தொடர்பான முக்கிய ஆதாரங்களை வைத்திருந்த நபர் ஒருவர் வட்டுக்கோட்டையில் கைது செய்யப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகர் விமலரத்தின தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ் அத்தியட்சகர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com