Saturday, March 29, 2014

தங்கல்லை பிரதேச சபைத் தலைவர் சிறையில் இருந்தவண்ணம் தேர்தல் பிரச்சாரத்தில்!

பிரித்தானியர் ஒருவரை கொன்று, அவரின் காதலியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், சிறைவைக்கப்பட்டுள்ள தங்கல்லை பிரதேச சபைத் தலைவர் சம்பத் சந்திரபுஷ்ப விதானபத்திரன தான் சிறைவைக்கப்பட்டுள்ள சிறை அறையிலிருந்த வண்ணம் கைத்தொலைபேசிகள் இரண்டினை வைத்துக்கொண்டிருக்கும்போது, சிறைச்சாலை அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.

இதுபற்றி சந்தேக நபரிடம் வினா தொடுத்தபோது, தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த இரு தொலைபேசிகளையும் பயன்படுத்தி வருவதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இவ்விரு தொலைபேசிகள் பற்றி, சிறைச்சாலை அன்றாடக் குறிப்பேட்டில் பதியப்பட்டிருக்கின்ற போதும் அவரிடம் கைத்தொலைபேசிகள் இருக்கவில்லை எனவும், அதனை மறைத்துவிடுமாறும் பல்வேறு இடங்களிலிருந்தும் அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக கூறப்படுகின்றது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com