மர்வினின் பாதத்தைப் பதம் பார்த்தது வளர்த்த நாய்! முற்பிறப்பில் செய்த பாவங்களே காரணம் என்கிறார் மர்வின்!!
அமைச்சர் மர்வின் சில்வாவை, அவர் வீட்டில் வளர்க்கின்ற நாய் கடித்துள்ளது.
இதற்கு முன்னர் சிங்கப்பூரில் வைத்து நாயினால் கடிக்கப்பட்டு, பெரும் சிரமத்தை ஏற்படுத்தி இடது காலே இம்முறையும் அவரது நாயினால் கடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் அமைச்சர் குறிப்பிடும்போது,தான் முற்பிறப்பில் செய்த பாவங்களுக்காக இவ்வாறு சோதனைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
களனி - தளுகமையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போது,
'அடிக்கடி நாய்கள் குரைக்கின்றன. வீதிகளிலும் நாய்களைக் காண்கிறோம். பைத்திய நாய்களும் வருகின்றன. கிராமத்தில் இருக்கும்போது அதிக நாய்களைக் கண்டிருக்கிறேன். என்றாலும், நான் நினைக்கவில்லை நான் அன்பாக வளர்க்கின்றன நாய் என்னைக் கடிக்கும் என்று. அதுவும் எனக்கு நல்லதொரு பாடம்தான். நான் நாயைக் கோபப்பட்டுக்கொள்ளவில்லை. இன்று பகல் வேளையும் நான் அதற்கு என் கைகளினாலேயே உணவூட்டினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment