இலங்கைக்கு வரும் உல்லாசப் பிரயாணிகள் பிச்சைக்காரர்கள்! - பொன்சேக்கா
தன்னை ஆயிரமாயிரம் சிறைகளில் பூட்டிவைத்தாலும், நாட்டில் வசந்தத்தை ஏற்படுத்துவேன் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேக்கா குறிப்பிடுகிறார்.
காலி இந்துருவவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றுகையில் -
“இந்நாட்டுக்கு வருகின்ற உல்லாசப் பிரயாணிகள் யாவர்? முச்சக்கர வண்டியொன்றில் நான்கு ஐந்து பேர் முட்டிச் செல்கின்ற உல்லாசப் பிரயாணிகள் கடையொன்றுக்குச் சென்று தேநீர் ஒன்று எடுத்து, இருவரும் குடிக்கின்றனர். அதேபோல சிறியதொரு அறை எடுத்து பத்துப் பேர் அளவில் தூங்குகின்றார்கள். “அயன்” சூடானதும் அதில் முட்டையை சுட்டுச் சாப்பிடுகிறார்கள். அவ்வாறானவர்கள்தான் எங்கள் நாட்டுக்கு உல்லாசப் பிரயாணிகளாக வருகின்றார்கள். இவர்களால் எங்கள் நாட்டுக்கு அன்னியச் செலாவனி வந்து சேருமா?
உல்லாசப் பயணிகள் வருகையால் இன்று எமது நாட்டுக்கு 10% மட்டுமே கிடைக்கின்றது. மத்திய கிழக்கிலிருந்து 80% அந்நியச் செலாவணி கிடைக்கின்றது.
எப்பொழுதும் தம்மை உலகின் தேசப்பற்றாளர்கள் எனச் சொல்லிக் கொள்வோர், நாடுகளைக் குட்டிச் சுவராக்கி மக்களை அவலத்திற்குள்ளாக்கினர். ஹிட்லர், இடிஅமீன் போன்றோர் அதனைத்தான் செய்தார்கள். குற்றம் செய்திருந்தால்தான் மின்சாரக் கதிரைக்குச் செல்ல வேண்டிவரும். எங்களது இராணுவத்தினர் ஒருபோதும் ஒரு குற்றமும் இழைக்கவில்லை. எந்தவொரு நீதிமன்றிலும், எவ்வேளையிலும் நான் அவர்களுக்காக எழுந்துநின்று குரல் கொடுப்பேன்”
(கேஎப்)
0 comments :
Post a Comment