ஜெனீவா பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
இலங்கைக்கு எதிரான ஜெனீவா பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் நேற்று(10.03.2014)காலை கிழக்கு மாகாண சிவில் பிரஜைகள் அமைப்பினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டம் கொழும்பு நகர மண்டபத்தில் இருந்து நடை பவனியாக ஜக்கிய நாடுகளின் இலங்கைக்கான அலுவலகம் முன்பு வரை சென்று தமது எதிர்ப்புகளைத் தெரிவித்ததன் பின்னர் அங்கிருந்து காலி வீதி வழியாக கொள்ளுப்பிட்டியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வரை நடை பெற்றது.
இறுதியில் இந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் சீலன் அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவரிடம் ஜெனீவா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்குத் தமது கண்டனத்தைத் தெரிவிக்கும் அறிக்கை ஒன்றை கையளித்தார்.
0 comments :
Post a Comment