Saturday, March 22, 2014

டக்ளஸும் விக்னேஸ்வரனும் மாகாண சபைத் தேர்தலில்... சூடுபிடிக்கிறது தேர்தல் பிரச்சாரம்...!

நடைபெறவுள்ள மேல்மாகாண சபைத்தேர்தலில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் கொழும்பு மாவட்டத்தில் டக்ளஸ் எனும் வேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் 36ம் விருப்பு வாக்கிலக்கத்தினைப் பெற்றுள்ளார்.

அதேவேளை மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பாக மேல் மாகாணம் கம்பஹா மாவட்டத்தில் விக்னேஸ்வரன் எனும் வேட்பாளர் முதலாம் இலக்கத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சர் மற்றும் முதலமைச்சர் ஆகியோரின் பெயர்களை கொண்டுள்ள மேற்படி வேட்பாளர்கள் தமிழ் மக்கள் பெருமளவில் வாக்குரிமையினைக் கொண்டுள்ள கொழும்பு மாவட்டம் வெள்ளவத்தையிலும், கம்பஹா மாவட்டம் வத்தளையிலும் மும்முரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com