'பாலங்கட ஹீனா” பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலி!
“பாலங்கட ஹீனா” என்ற பெயர்தாங்கிய பாதாள உலக உறுப்பினர் ஒருவர் இன்று பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டின் மூலம் இறந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட இரத்தினக்கல் வியாபாரி ஒருவரின் கொலை தொடர்பில் கைது செய்யச் சென்றபோது, அருண கமகே சுகத் சமிந்த எனும் பெயருடைய இந்நபர், பொலிஸாரை கைத்துப்பாக்கியினால் சுடுவதற்கு எத்தனித்தபோது, பொலிஸார் திருப்பிச் சுட்டதில் இவர் இறந்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment