Wednesday, March 5, 2014

வாக்குகள் வாங்கப்படுகின்றன.... அப்பாடா! வாக்காளர்களுக்கு ரூபா 5000 காசோலை....

எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற காலி மாவட்ட ஆளுங்கட்சி வேட்பாளர்கள் பலர், வாக்காளர்களுக்கு ரூபா 5000 வீதம் காசோலைகள் வழங்குவது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கும் பெபரல் அமைப்புக்கும் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.

அரச நிறுவனமொன்றின் இலச்சினை பொறிக்கப்பட்டு, குறித்த நிறுவனத்தின் மேலாளரின் கையொப்பத்துடன் இந்த காசோலைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 60 நாட்களுக்குள் பணம் மாறக்கூடிய வண்ணம் திகதியிடப்பட்டுள்ளதென்றும் குறிப்பிடப்படுகின்றது.

காசோலையை, குறித்த அபேட்சகரின் இலச்சினை பதிக்கப்பட்ட உறையில் இட்டு வழங்கப்படுகின்றது என்றும் தெரியவருகின்றது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com