விகாரைக்கு வர்ணம் தீட்ட வந்த மாணவனை துஷ்பிரயோகப்படுத்திய தேரர் கைது!
விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் தேரரை நேற்று (04) கொஸ்லாந்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொஸ்லாந்த பகுதி பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவனொருவனே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்குச் சென்று வீடு திரும்பிய மாணவன் மறுநாள் பாடசாலைக்கு செல்ல மறுத்துள்ளான். மாணவனை அவரின் பெற்றோர் வினவியபோதே மாணவன் இது குறித்து பெற்றோருக்கு தெரிவித்துள்ளான்.
இது தொடர்பாக மாணவனின் பெற்றோர் கொஸ்லாந்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து குறித்த தேரரை கைது செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment