Monday, February 17, 2014

சர்வதேசமெங்கும் நான் சுற்றிச் சுழன்றுள்ளேன்.. மின்சாரக் கதிரைபற்றி ஒன்றும் எனக்குத் தெரியவில்லை! -முன்னாள் ஜனாதிபதி

உலகெங்கிலும் தான் சுற்றி வந்துள்ளதாகவும், தனக்குத் தெரியாத இடம் ஏதும் இல்லை எனவும், அங்கெல்லாம் தன்னைத் தெரிந்தவர்களும் தனக்குத் தெரிந்தவர்களும் இருப்பதாவும் குறிப்பிடுகின்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்க, மின்சாரக் கதிரை என்பது தேர்தலில் அதிகம் வாக்குகளைப் பெற்றுள் கொள்வதற்காக சோடிக்கப்பட்டுள்ள பொய் எனக் குறிப்பிடுகின்றார்.

நேற்று (16) மறைந்த முன்னாள் அரசியல்வாதியும், சந்திரிக்கா குமாரத்துங்கவின் கணவனுமான விஜய குமாரத்துங்கவின் நினைவு தின நிகழ்வில், ஊடகவியலாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார்.

அவர் அங்கு கருத்துரைக்கும்போது,

“எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது. சர்வதேசம் பற்றி எனக்கு நன்கு தெரியும். சர்வதேச ரீதியாக எனக்கு நெருங்கிய நட்புறவு உள்ளது. நான் மின்சாரக் கதிரை பற்றி ஒருபோதும் ஒரு வார்த்தை கேட்டும் இல்லை. அது முழுமையாக சோடிக்கப்பட்ட பச்சைப் பொய். தேர்தலில் வாக்குகளைப் பிடுங்குவதற்காக சோடிக்கப்பட்ட பொய். சர்வதேசமெங்கும் நடக்கும் விடயங்கள் எனக்கும் தெரியும். அப்படி எதுவும் இல்லை“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com