Monday, February 17, 2014

மர்மப் பொருள் வானிலிருந்து விழுந்து தீப்பற்றியெரிந்தது வீடு!

நேற்றிரவு வலபானே, ராகல பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின்மீது வானிலிருந்து மர்மப்பொருள் ஒன்று விழுந்ததனால், அவ்வீடு தீப்பற்றியுள்ளது.

பிரதேவாசிகள் அந்நெருப்பை கடும் பிரயத்தனத்துடன் அணைத்துள்ளனர். குறிப்பிட்ட வீட்டுக் கூரையில் 6 அங்குலத்திற்கு சிதைவு ஏற்பட்டுள்ளது.

வான்பொருளுடன் தொடர்புற்ற எந்தவொரு பகுதியும் காண்பதற்கில்லை எனவும், இதுதொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழக ஆய்வுக் குழுவினர் ஆய்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது குறித்த வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com