Monday, February 17, 2014

நீர்கொழும்பு நகைக்கடையில் ஒரு கோடி ரூபா பணம் கொள்ளை!

நீர்கொழும்பு நகரில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை மற்றும் வெளிநாட்டு நாணயமாற்று நிலையத்தில் சுமார் ஒரு கோடி ரூபா பணம் இன்று(17.02.2013) பிற்பகல் 2 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களால் துப்பாக்கி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த வர்த்தக நிலையத்தில் வியாபார நடவடிக்கை நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஹெல்மட் மற்றும் ஜாக்கட் அணிந்த இரண்டு பேர் கடையில் நுழைந்து வர்த்தக நிலையத்தின் உரிமையாளரது தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தி பணத்தை கேட்டுள்ளார்.

மற்றைய நபர் பணத்தை எடுத்து பையொன்றில் போட்டுக்கொண்டு இரண்டு நபர்களும் அங்கிருந்து வெளியேறி கடைக்கு சற்று தூரத்தில் தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக தகவலளித்த கடை ஊழியர்‘ஹெல்மட் மற்றும் ஜாக்கட் அணிந்த இரண்டு பேர் கடை உரிமையாளரிடம் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி கடையில் இருந்த டொலர் மற்றும் உள்நாட்டு நாணயங்கள் அடங்கலாக ஒரு கோடி ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தினை கொள்ளையிட்டு சென்றனர். 

எனினும் அவர்கள் முழுமையாக மூடப்பட்ட ஹெல்மட் அணிந்திருந்ததால் முகத்தை சரியாக பார்க்க முடியவில்லை’ என்றார்.

இதேவேளை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்த நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த லியனகே விசாரணைகளை மேற்கொண்டதை தொடர்ந்தும் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com