Wednesday, February 12, 2014

காட்டு யானைகள் வீட்டுக்குள்ளே! வனவிலங்கதிகாரிகள் சாராயக்கடைக்குள்ளே!

ஆலையடிவேம்பு பிரதேசத்திற்குட்பட்ட சாந்திபுரம் கிராம மக்கள் காட்டு யானைகளின் அட்டகாசத்திற்கு முகம்கொடுத்து வருகின்றனர். பிரதேசத்தினுள் புகுந்த காட்டு யானைகள் எவ்வாறு குடிமனைகளை அடித்து நொருக்கியுள்ளது என்பதனை இங்குள்ள படங்களில் காண்கின்றீர்கள்.

இங்கு கவலைக்குரிய விடயம் யாதெனில் இலங்கையில் வனவிலங்கு இலாக என்ற இலாக ஒன்று உள்ளது. இந்த இலாகாவில் உள்ளவர்கள் வன விலங்குகளை வேட்டையாடுகின்றவர்களை பிடித்து அவர்கள் வேட்டையாடும் இறைச்சிகளை பிடிங்கிக்கொண்டு சென்று பொரித்து தண்ணி அடிக்கின்றனரே தவிர வன விலங்ககுளால் மக்களுக்கு எற்படுகின்ற துயரங்களை தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

சம்பந்தப்பட்டவர்கள் இந்த மக்களின் துயர் போக்க ஏதாவது நடவடிக்கை எடுப்பார்களா?




1 comments :

Anonymous ,  February 12, 2014 at 9:03 PM  

இப்படி பட்ட திருந்தாத தமிழ் சனம் நிறைய உள்ளது.
எமக்கு என்று ஒரு சுதந்திர நாடு இருப்பின் எப்படியிருக்கும் என்று சிந்தித்து பாருங்கள்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com