Saturday, February 22, 2014

அவுஸ்திரேலியா மற்றும் கனடாவிற்கு ஏற்றுவதாகக் கூறி முன்னாள் புலிகளிடம் மில்லியன்களை ஏப்பம் விட்ட முன்னாள் புலி!

சேரன் , மோகன் , பாலன் என பல் வேறு பேர் கொண்டு அழைக்கப்படும் இவர் முன்னாள் புலி. யுத்தத்தில் காயமடைந்த இவர் பின்னர் லண்டனில் தஞ்சம் புகுந்த நிலையில் புலிகளின் ஆட்கடத்தல் வியாபர பணிகளுடன் இணைந்து கொண்டார். சண்சீ போன்ற பிரபல கப்பல்களி்ல் ஆட்களை ஏற்றியதில் இவருக்கும் பங்குண்டு என்று பேசப்பட்டது. புலிகளின் அழிவுக்கு பின்னர் தமது கைகளுக்கு உட்பட்டதை சுருட்டிக்கொண்டு புலிகளில் இவரும் ஒருவர்.

ஆனால் இவர் ஒரு படி முன்னே சென்று போர் முடிவடைந்த பின்னர் நாட்டில் புனர்வாழ்வு பெற்று வெளியேறிய மற்றும் தடுப்பிலுள்ள புலிகளை அவுஸ்திரேலியா மற்றும் கனடாவுக்கு அனுப்புவதாக பல நுாறு மில்லியன்களை ஏப்பம் விட்டு அவர்களை நடுத்தெருவில் விட்டுள்ளதாக புலிகளின் இணையங்கள் தற்போது குற்றஞ்சுமத்துகின்றன.

தலைமையால் கைவிடப்பட்ட புலிகள் தம் உயிழரைக் காத்துக் கொள்வதற்காக தமது சொந்தக் காணி விற்று மாட்டை விற்று சிறுகச் சிறுக சேர்த்த பணத்தை ஏமாற்றி இவர் நயவஞ்சம் செய்து விட்டதாக பாதிக்கப்பட்ட புலிகள் தெரிவிக்கின்றனர். இவன் ஒரு முன்னாள் புலி தம்மை ஏமாற்ற மாட்டான் என நம்பியே இவனிடம் பணத்தை கொடுத்தாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை ஆபிரிக்க நாடான மாலியில் கொண்டு வைத்துக் கொண்டு பணம் தந்தால் தான் ஏற்றுவதாகக் கூறி கறுப்பினத்தவர்களை வைத்து மிரட்டி , உயிர் அச்சுறுத்தல் விடுத்தும் பணம் பறித்துள்ளான்.


இவரின் ஏனைய மோசடிகள் ....

1 . போரால் பாதிக்கப்பட்டு அச்சத்தில் வெளியேறிய பெண்களை கறுப்பின அடியாட்களை வைத்து பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்தியுள்ளார் . அது மட்டுமல்லாது வெளிநாட்டிற்கு ஏற்ற வேண்டும் எனில் தனது முகவர்களுடனும் பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளானாம் என புலிகளின் இணையங்கள் தெரிவிக்கின்றன.

2 . ஆபிரிக்காவில் சற்று காலத்திற்கு முன்னர் குடி வரவு அதிகாரிகளின் மூலம் பல இலட்சம் பேர் பிடிக்கப்பட்டு நாட்டிற்கு திருப்பி அனுப்பட்டதும் இவரின் சதிகளில் ஒன்றே என்றும் பணத்தை தாருங்கள் என ஏமாந்தவர்கள் தொடர்ந்து கேள்வி கேட்க வேறு வழி இன்றி தன் இனத்தவர்கள் என்றும் பாராது காட்டிக் கொடுத்துள்ளானாம் என்றும் அவ்விணையங்கள் குற்றஞ்சுமத்துகின்றன .

இங்கு சிறப்பான விடயம் யாதெனில் மேற்படி பேர்வழி சிறிது காலங்களுக்கு முன்னர் புலம்பெயர் தமிழரின் பிரதி நிதியாக இந்திய அரசியல்வாதிகளான நெடுமாறன் உடபடி பலரையும் பல சினிமா பிரபலங்களையும் சந்தித்துள்ளான்.

எனவே இந்திய தொடர்புகளை பேணுகின்ற புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இவ்வாறான மோசடிகளுக்காகவே இந்திய தரப்புக்களை சந்திக்கின்றன என்பதற்கு இதுவும் ஒர் உதாரணம்.

இவனது மனைவியும் கடற்புலிகளின் முக்கிய உறுப்பினர் என்பதும் அதன் ஊடாகவே இவனுக்கு புலிகளின் கப்பல்போக்குவரத்து பிரிவுடன் பணிபுரிய வழி கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com