Friday, February 14, 2014

மகனை கிரிக்கட் மட்டையால் அடித்துக் கொன்றான் தந்தை ! தந்தையைக் சுட்டுக் கொன்றனர் பொலிஸார்!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து 100 கிலோ மீற்றர் தென்கிழக்கே உள்ள மோர்நிங்டன் தீப கற்பப் பகுதியில் டையப் ஓவல் மைதானம் உள்ளது. அங்கு நேற்று மாலை ஜுனியர் அணியைச் சேர்ந்த பள்ளிச் சிறுவர்கள் கிரிக்கட் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் 11 வயதான லியூக் பட்டியும் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவனைப் பார்ப்பதற்காக அவனது தந்தை கிரெக் (54) அங்கு வந்துள்ளார்.

ஆட்டம் முடிந்த பின்னர் அந்தச் சிறுவன் சரியாக விளையாட வில்லை என்று அவனது தந்தை கிரிக்கட் மட்டையாலேயே அவனது தலையில் பலமுறை அடித்துள்ளார். இதனைக் கவனித்து யாரோ காவல்துறையினருக்கு தகவல் சொல்ல, அவர்கள் அங்கு வந்தபோது கிரெக் கையில் சிறிய கத்தியுடன் நிற்பதைப் பார்த்துள்ளனர். சிறுவனோ அருகே இறந்து கிடந்தான். மிளகாய், மிளகுத்தூள் தூவி அவரை அடங்கச் செய்த முயற்சிகள் பலிக்காமல் போகவே, பொலிஸார் அவரது மார்பில் சுட்டுள்ளனர்.

அதன்பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள கிரெக் இன்று காலை இறந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்தான் அவரது தந்தையாக இருக்கக்கூடும். இறந்த சிறுவனின் உடலில் கத்திக் குத்துக் காயங்கள் இருந்ததாகக் கூறமுடியவில்லை. ஆனால் கொடூரமான இந்தக் காயங்களினாலேயே சிறுவன் இறந்துள்ளான் என்பது தெளிவாகின்றது என காவல்துறை கமாண்டர் டக் பிரையர் தெரிவித்துள்ளார்.

இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாத சிறுவனின் தாய் ரோஸி பட்டி கூறுகையில்,

“என்னை விட்டுப் பிரிந்து வாழும் என் கணவருக்கு நீண்ட நாட்களாக மனநிலை சரியில்லை. வன்முறைத் தாக்கம் அவரிடத்தில் காணப்பட்டது. ஆனால் மகனைப் பார்க்க அவருக்கு அனுமதியளிக்கப்பட்டது. பயிற்சியின்போது அங்கு பார்வையாளர்கள் இருப்பதால் என் மகன் பாதுகாப்பாக இருப்பான் என நம்பினேன்” என்று கூறினார்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவரான அவர், இந்த சம்பவம் நடந்தபோது சில மீற்றர் தொலைவிலேயே இருந்துள்ளார். இருப்பினும் அவரால் தனது மகனைக் காப்பாற்ற முடியாமல் போனது அவரை பெரும் சோகத்தில்ஆழ்த்தியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com