Saturday, February 8, 2014

சிவனொளிபாதமலை காண்டாமணியை கோத்தபாய திறந்து வைத்தார்;ஹெலியிலிருந்து மலர் தூவினார் ஜனாதிபதி !! (படங்கள்)

சிவனொளிபாதமலையில் புதிதாக பொருத்தப்பட்டிருக்கும் காண்டாமணி மற்றும் விளக்கு ஆகியன நேற்று வெள்ளிக் கிழமை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவி னால் திறந்து வைக்கப்பட்டது. முதன் முறையாக ஹெலி கப்டர் மூலம் கடந்த மாதம் புதிய காண்டாமணியும் விள க்கும் சிவனொளிபாதமலை உச்சிக்கு கொண்டு செல்லப் பட்டிருந்தன.

இவற்றை பொருத்தும் பணிகள் கடந்த வாரம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இவற்றை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று காலை விசேட பூஜைகளோடு ஆரம்பமாகியது. இதன் போது பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர். கடுங்குளிர் காலநிலை நிலவிய போதிலும் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ள பலரும் மலை உச்சிக்கு வருகை தந்திருந்தனர். பூஜைகளின் பின்னர் பாதுகாப்பு செயலாளர் காண்டாமணி மற்றும் விளக்குகளை திறந்து வைத்தார். இதன்போது ஹெலிகப்டர் மூலம் பூக்கள் வானில் இருந்து தூவப் பட்டமையும் குறிப்பிடத்தக்கது.











0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com